பெரம்பூர்: வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 5வது தெரு வைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்திகேயன் (21) இவருக்கு சமீபகாலமாக உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கை போன்று செயல்பட்டு வந்துள்ளார். பலமுறை பெற்றோர்கள் இவரை கண்டித்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோருக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் நான் திருநங்கைகளுடன் செல்ல இருக்கிறேன், என தெரிவித்துள்ளார்.