தமிழகத்தில் ஒரேநாளில் 10,723 பேருக்கு தொற்று 10 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: இதுவரை 13,113 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. இந்நிலையில் 20ம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று அறிவித்துள்ளது. இதனால் தொற்றுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இது குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,10,130 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 10,723 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 3,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 70,391 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 6,533 பேர் ஆண்கள், 4,190 பேர் பெண்கள் ஆவார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5,925 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 42 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 16 பேர் நேற்று உயிரிழந்தனர். நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு 954, கோவை 727, கடலூர் 183, திண்டுக்கல் 195, ஈரோடு 226, காஞ்சிபுரம் 332, கன்னியாகுமரி 153, கிருஷ்ணகிரி 227, மதுரை 275, நாமக்கல் 147, ராணிப்பேட்டை 114, சேலம் 275, தஞ்சாவூர் 175, திருவள்ளூர் 503, திருவண்ணாமலை 153, திருவாரூர் 119, தூத்துக்குடி 252, திருநெல்வேலி 309, திருப்பூர் 307, திருச்சி 309, வேலூர் 207, விழுப்புரம் 129, விருதுநகர் 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: