தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 91 ஆயிரத்து 451(9,91,451) ஆக  உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா  பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்  மூலம் மொத்த பாதிப்பு 9,91,451ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 5,925 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  மொத்தம் 9,07,947 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த  பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 21; தனியார் மருத்துவமனையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 3304 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 283436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,11,87,630 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று  மட்டும் 1,10,130 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 70,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,98,575 பேர் ஆண்கள்,  இன்றைக்கு மட்டும் 6,533 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,92,840 பேர் பெண்கள்,  இன்றைக்கு மட்டும் 4,190 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 263 மையங்களில் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 194.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 29 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.

* * வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி  செய்யப்படவில்லை.

Related Stories: