சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் அடுத்த 3 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் 1 லட்சம் டோஸ்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு அனுப்பியுள்ள 1 லட்சம் தடுப்பூசி அரை நாளில் தீர்ந்துவிடும் என்பதால் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.