ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் பல்வேறு கண்மாய்கள் மராமத்து பணி செய்யாததால் புதர் மண்டி கிடக்கிறது. ராஜபாளையம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உற்பத்தியாக கூடிய மழைநீரை நம்பி நூற்றுக்கணக்கான கண்மாய்கள் உள்ளன. இப்பகுதியில் பெயரளவிற்கு ஒருசில கண்மாய்களில் மட்டும் மராமத்து பணி நடைபெற்றது. ஆனால், ஏராளமான கண்மாய்கள் மராமத்து செய்யாததால் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கட்டிட கழிவுகளும், குப்பையும் கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் கண்மாய்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.