சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த சந்தேகங்களுக்கு 044-46122300, 044-25384520 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், கொரோனா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் என்று தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என ஆணையர் கூறினார். சமூக வலைத்தளங்களில் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் ஊரடங்கு பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது ஆனால் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும் என கூறினார். தடுப்பூசி குறித்த அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.