ஓசூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் குழி

ஓசூர்: ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் சாலையில் உள்ள குழியை சீர்செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூரில் உள்ள தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலிருந்து ராயக்கோட்டை சாலைக்கு செல்லும் சாலையில் சிமெண்ட் பலகை உடைந்து சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இரவு பணிக்கு சென்று வருகின்றனர். அப்போது, சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்ட்டுள்ளது. எனவே, உடனடியாக இந்த குழியை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: