திருக்கோவிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே போலீசார் நடத்திய சாராய வேட்டையில்  500 லிட்டர் ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம்  அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக  அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் ஏரிக்கரை அருகே மணல்மேடு பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து அரகண்டநல்லூர் போலீசார் 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அடுப்புகளை அழித்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: