நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சாக்கு பையை உடல் முழுவதும் மூடி தூங்கிக் கொண்டிருந்த வாலிபர், கொலை செய்து வீசப்பட்டதாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில், இரட்டை ரயில் பாதைக்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 2 வது பிளாட்பாரத்தில் மட்டுமே ரயில் வந்து செல்கிறது. காலை வேளையில் இந்த பிளாட்பாரத்தில் பலர் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். நேற்று காலையிலும் ஏராளமானவர்கள் நடைபயிற்சியில் இருந்தனர். அப்போது திருவனந்தபுரம் வழிப்பாதையில் பிளாட்பாரத்தையொட்டி மஞ்சள் கலர் சாக்கு பையால் உடல் முழுவதும் மூடியபடி ஒருவர் கிடந்தார்.