திருவனந்தபுரம்:‘கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியை சேர்ந்தவர் முகமது குட்டி. இவர், கடந்த 2007, ஆகஸ்ட் 8ம் தேதி உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, திசைமாறி வந்த ஜீப் ஒன்று பைக் மீது மோதியது. இதில் முகமது குட்டி இறந்தார். இதையடுத்து, நஷ்டஈடு கோரி திரூர் மோட்டார் வாகன தீர்ப்பாணையத்தில் முகமது குட்டியின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அதில், 2.50 லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், முகமது குட்டி ஹெல்மெட் அணியாததால், நஷ்டஈடு தொகையில் 20 சதவீதம் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து முகமது குட்டியின் குடும்பத்தினர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.