சென்னை: தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழா நடத்தி அதிகம் பேருக்குத் தடுப்பூசி போட தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது. 5,000க்கு மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 15ம் தேதி 2,17,666 பேருக்கும், 16ம் தேதி 2,01,495 பேருக்கும் என தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் நேற்று 1,13,349 பேர் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதையடுத்து நேற்று வரை 47,05,473 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் கடந்த 16ம் தேதியை விட நேற்று 88,146 பேர் குறைவாக தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.