மைத்துனியுடன் வாலிபர் தற்கொலை: திருவிக நகரில் பரபரப்பு

பெரம்பூர்: மேற்கு வங்கத்தை சேர்ந்த கணேஷ்சம் மான்டல் (27), சென்னை திருவிக நகர் கே..சி.கார்டன் 4வது தெருவில் தங்கி, கடந்த 15 வருடங்களாக இதே பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோஸ்னா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மனைவி, மகனை மேற்குவங்கத்தில் விட்டுவிட்டு கணேஷ்சம் மான்டல் மட்டும் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு சென்ற இவர், மனைவியின் சகோதரி லபானி மான்டல் என்பவரை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனிடையே, மேற்குவங்கத்தில் உள்ள வசாந்தி காவல் நிலையத்தில் லபானி மான்டலை காணவில்லை என உறவினர்கள் புகார் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கே.சி.கார்டன் 2வது தெருவில் சரவணராஜ் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு அறையை, தன்னிடம் வேலை செய்யும் 17 வயது சிறுவன் சவுமித்ரா என்பவருக்கு வாடகைக்கு வேண்டும் என கூறிய கணேஷ்சம் மான்டல், அதற்காக ரூ.7000 அட்வான்ஸ் கொடுத்துள்ளார். நேற்று காலை அந்த வீட்டில் மின்விசிறி மாட்டுவதாக கூறி சென்ற கணேஷசம் மான்டல், மைத்துனியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருவிக நகர் போலீசார், அவர்களின் உடல்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மனைவி மேற்கு வங்கத்தில் உள்ள நிலையில் அவரது தங்கையை எதற்காக சென்னை அழைத்து வந்தார். இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு உள்ளதா, அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாருக்கு பயந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: