சென்னை: ஆவடி அருகே மோரையில் உள்ள சாலை தடுப்பு சுவர் மீது பைக் மோதியதில் மாஜி போலீஸ்காரர், மகள் ஆகியோர் மண்டை உடைந்து பரிதாபமாக பலியாகினர். திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(40). மாஜி போலீஸ்காரர். நேற்று மாலை பாஸ்கர் தனது மகள் ப்ரீத்தியுடன்(13) மீஞ்சூரில் உள்ள தங்கை வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளி வட்டச்சாலை ஆவடி அடுத்த மோரை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவரது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதில், அவரும் மகளும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பாஸ்கர் சம்பவ இடத்தில் மண்டை உடைந்து பலியானார்.