புதுடெல்லி: சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, டிவிட்டர் இணையதளம் நேற்று முடங்கியது. சமூகவலை தளங்களில் ஒன்றான டிவிட்டர், உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இதில், தங்களின் கருத்துகளை பதிவு செய்வதில் மக்களும், கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் ஆர்வத்துடன் உள்ளன. இந்நிலையில், டிவிட்டரின் இணையதள சர்வரில் நேற்று காலையில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், உலகளவில் இதை பயன்படுத்தி வரும் பல கோடி பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களின் டிவிட்களை பதவியேற்றம் செய்ய முடியாமலும், டைம்லைன் தகவல்களை பார்க்கவும் முடியாமலும் தவித்தனர்.