சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதி சாலையோரம் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், நேற்று சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே புதுக்குய்யனூர் பிரிவு என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றன.