வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம்: வேளச்சேரியில் 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது !

வேளச்சேரி: வேளச்சேரியில் சர்ச்சைக்குள்ளான 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, வேளச்சேரியில் உள்ள அந்த வாக்குச்சாவடியில் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்திற்கு, மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. ஆண்களுக்கான அந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: