ஐபிஎல் டி20: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை:  ஐபிஎல் டி20 தொடரில்  பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக ஷாருக்கான் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

Related Stories: