செய்யாறு: மழையால் நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க வலியுறுத்தி, செய்யாறில் சேற்றில் புரண்டு விவசாயி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று உழவர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், மழையால் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும். கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய குடோன்களை அமைக்க வேண்டும்.