மீன்பிடி தடை காலம்: படகுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

கடலூர்: மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவே தங்கள் படகுகளுடன் கரைக்கு திரும்பினர்.

இதை தொடர்ந்து தங்கள் படகுகளை கரையில் ஏற்றி அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கி, வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வலைகளை சீரமைக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் மீன்பிடி தளம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: