ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவர் தற்கொலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கே.கீரனூரை சேர்ந்த விவசாயி மாரிமுத்து மகன் யோகேஷ் (14). இவர் நீலாகன்னிவலசில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். யோகேஷை அவரது தம்பி விளையாட்டாக திட்டியதாக தெரிகிறது. இதை நினைத்து மனம் உடைந்த யோகேஷ் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: