மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வருவாய்த்துறையில் காலிபணியிடங்களை நிரப்புவது, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குவது, கருணை அடிப்படையில் நியமனம்- பணிவரன் முறைப்படுத்துவது, கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள உதவி கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த விடுப்பு போராட்டத்தில் 175க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகங்கள், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்தின் காரணமாக ஊழியர்கள் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால், பல்வேறு தேவைகளுக்காக சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்….

The post மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: