டெல்லி: கொரோனா பரவல் காரணமாக புராதன சின்னம், இடங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய தொல்லியல் துரையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், அருங்காட்சியகங்களும் மே 15ம் தேதி வரை மூடப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் மூடப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார்.