சாத்தனூரில் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா

பொன்னமராவதி: பொன்னமராவதி ஒன்றியம், சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஐந்தாமாண்டு விழா மாணவ, மாணவிகளின் கலை நடனம் நடைபெற்றது. சாத்தனூர் நடைபெற்ற ஐந்தாமாண்டு ஆண்டு விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம், தலைமை வகித்தார். வட்டார வள மேற்பார்வையாளர் நல்லநாகு, ஆசிரியர் பயிற்றுனர் யசோதா, மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மஞ்சுளா வரவேற்று பேசினார். இடைநிலை ஆசிரியர் இருதயராஜ் லியோ ஆண்டறிக்கையை வாசித்தார். அரசமலை ஊராட்சி மன்றத்தலைவர் பழனிவேல்,ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன், துணைத் தலைவர் டாக்டர் அப்துல் சலாம், காரையூர் முன்னாள் ஊராட்சி பாரதி சிதம்பரம், அரசமலை முன்னாள் தலைவர் ராமச்சந்திரன்,அரசமலை ஊராட்சி செயலர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளின் நடனம், பாட்டு மன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன ஆசிரியர் மஞ்சுளா தொகுத்து வழங்கினார். முன்னதாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ செல்வங்களுக்கு காரையூர் அரசு மருத்துவர் டாக்டர் துரை நவரத்தினசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினார். இப்பள்ளி ஆண்டு விழாவினை இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருதயராஜ் லியோ நன்றி வழங்கினார்….

The post சாத்தனூரில் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Related Stories: