ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் நேற்று மர்ம நபர்கள் வைத்த தீயால் காட்டுப்பகுதியில் தீப்பிடித்து அரிய வகை மரங்கள், மூலிகை வகை செடி, கொடிகள் எரிந்து நாசமானது. ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் 6வது முறையாக மண்டலவாடி அருகே உள்ள மலையடிவாரத்தில் மர்ம நபர்கள் வைத்த தீயால் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த காட்டுத்தீயால் காட்டிலிருந்த அரியவகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், புல் வகைகள் மற்றும் சிறிய வகை ஆமை, மலைப்பாம்பு, முயல் உள்ளிட்ட உயிரினங்கள் கருகியது.