பழநி: பழநி மலைக்கோயிலில் உணவு கிடைக்காததால் நகர் பகுதிக்குள் புகுந்த குரங்கு கூட்டத்தால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பழநி மலைக்கோயிலில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இருந்தன. இவை பக்தர்கள் வழங்கும் பிரசாதங்கள், உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தன. பக்தர்கள் வருகை குறைவால் குரங்குகள் உணவின்றி வாடின.