ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பட்டப்பகலில் திமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் திமுக 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி, அண்ணாமலை ஈஸ்வரன் சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்கு டூவீலரில் சாமி கும்பிட சென்றார். அப்போது வழிமறித்த மர்மக்கும்பல் அண்ணாமலை ஈஸ்வரனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.