மாணவனிடம் பணம் பறிப்பு

அண்ணாநகர்: புனே மாவட்டத்தை சேர்ந்தவர் பயஸ் அகர்வால்(18). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அம்மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக  கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி,   ஊடரங்கு அமல்படுத்தபட்டுள்ளது.  இதனையடுத்து, அவர், சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் விட்டுக்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு, திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 2  திருநங்கைகள் அவரை வழிமறித்து ஆசீர்வாதிப்பது ேபால் நடித்து மணிபர்சில் இருந்த ரூ.6,500 ரொக்கத்தை பறித்து தப்பிச்சென்றனர். புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 திருநங்கைகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: