(வேலூர்) பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில்

திருவலம், மார்ச் 28: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவலம் தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ தேர் திருவிழா, நடராஜ பெருமான் உடனுறை சிவகாமியம்பாள் ஆருத்ரா தரிசனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பிரமோற்சவ தேர்திருவிழாவையொட்டி நேற்று உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தொடர்ந்து, கொடிமரத்தில் தலைமை குருக்கள் செல்லப்பா தலைமையில் கந்தன், உமாபதி மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினர். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலைய துறை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு உட்பட கலந்து கொண்டனர். இதையடுத்து, 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் உற்சவமூர்த்திகள் அன்னம், சிம்மம், பூதம், வெள்ளி ரிஷபம், மயில், கிளி போன்ற பல்வேறு வாகனங்களில் பவனி வர உள்ளனர்.வருகிற 2ம் தேதி ரத உற்சவத்தில் கணபதி, முருகர் சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும், சோமாஸ்கந்தர் உடனுறை உமா பார்வதி ஒரு தேரிலும், மற்றொரு தேரில் தனுமத்யம்பாள் என 3 தேர்களில் அலங்கரிக்கப்பட்டு பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், பிரமோற்சவ திருவிழா கமிட்டி தலைவர் சரவணன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்….

The post (வேலூர்) பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: