பெரம்பூர்: வியாசர்பாடி பி கல்யாணபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் சூர்யா (எ) லாரா(29). திருநங்கை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். பெற்றோர் பலமுறை இவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காண்பித்து சிகிச்சைகள் பெற்று வந்தபோதிலும் தொடர்ந்து எதிர்மறையான சிந்தனைகளை கொண்டு அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார்.