சென்னை: அண்ணாநகரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சரவணன்(31) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது நிறுவனத்தில் இருந்து இந்திய மதிப்பில் 40 லட்சம் மதிப்புள்ள சவூதி ரியால் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செலுத்த பைக்கில் வந்து கொண்டிருந்தார். தி.நகர் தெற்கு போக் சாலையில் வரும்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.