காங். நிர்வாகி வீட்டில் 30 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில், 30 சவரன் நகைகளை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பாலாறு 3வது நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் (40). செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர். பிரவின்குமாரின் மனைவி உடல்நலக் குறைவால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக பிரவின்குமார், நேற்று முன்தினம் சென்னை சென்றார்.

மாலையில் அவர் வீடு திரும்பியபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள், 3 லட்சம், வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த கேமராக்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: