கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில், 30 சவரன் நகைகளை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பாலாறு 3வது நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் (40). செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர். பிரவின்குமாரின் மனைவி உடல்நலக் குறைவால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக பிரவின்குமார், நேற்று முன்தினம் சென்னை சென்றார்.