வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

ஆவடி: அம்பத்தூர், ஐசிஎப் காலனியை சேர்ந்தவர் தர்மராஜ் (32). அம்பத்தூர் - அயனம்பாக்கம் சாலையில் மளிகைக்கடை மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் தர்மராஜ் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். இருவரும் தர்மராஜிடம் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்துவிட்டு, பணம் தராமல் புறப்பட்டனர்.

இதை பார்த்த தர்மராஜ், அவர்களிடம் கூல்டிரிங்ஸ் பணம் கேட்டார். உடனே அவர்கள், எங்களிடமே பணம் கேட்கிறாயா என கூறி, தர்மராஜை சரமாரியாக தாக்கினர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதுகுறித்து தர்மராஜ், ஆவடி தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அந்தபகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, வாலிபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories: