பார் உரிமையாளரிடம் மாத வசூல் ‘மாமூல்’ ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை: செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் தலைமை காவலர் ஜெயகாந்தன். இவர், தனது காவல் நிலையத்துக்கு உட்பட்ட பார் உரிமையாளரிடம் மாதம் ரூ.24 ஆயிரம் மாமூல் தொகை கேட்டு பேசிய ஆடியோ 2 நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வைரலானது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் தலைமை காவலர் மீது குற்றச்சாட்டு இருப்பது நிரூபிக்கப்பட்டதால் ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: