சென்னை: சென்னை சித்தாலப்பாக்கம் அரசன்கழனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில், நேற்று முன் தினம் இரவு, இளம்பெண்ணும், வாலிபரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்துகிடந்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள், பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ‘விஷமருந்தி இறந்து கிடந்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த அபினாஷ் (30) மற்றும் அவரது அத்தை மகள் பல்லவி (21). பெங்களூர் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த பிகாம் பட்டதாரிகளான இருவரும் கடந்த 2 வருடமாக, காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பல்லவியின் தாய், காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.