தமிழகத்தில் 7 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா

சென்னை: மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 83,332 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,984 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49,985 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,289 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பெற்று வந்த 18 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னை உட்பட 16 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2482, செங்கல்பட்டு 771, கோயம்புத்தூர் 504, காஞ்சிபுரம் 204, கன்னியாகுமரி 124, மதுரை 254, நாகப்பட்டினம் 123, சேலம் 138, தென்காசி 113, தஞ்சாவூர் 214, திருவள்ளூர் 285, திருவாரூர் 106, திருநெல்வேலி 220, திருப்பூர் 165, திருச்சி 199, வேலூர் 107 உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: