ஓட்டலில் மக்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 11-ம் தேதி இரவு 10 மணியளவில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்கள் மீது காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தாக்குதல் நடத்தினார். இதில், கடையில் சாப்பிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. புகாரை அடுத்து தாக்குதல் நடத்திய சப்- இன்ஸ்பெக்டர் முத்து நேற்று முன்தினம் அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.  இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துவை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: