டெல்லி: கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டாக நாட்டையே அச்சுறுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளார். 130 கோடி மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக மோடி தெரிவித்தார்.