திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நாளை விஷூ கணி தரிசனம் நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை விஷூ கணி தரிசனம் காலை 5 முதல் 7 மணி வரை சன்னிதானத்தில் நடைபெறும். இதில் ஐயப்ப சுவாமியை விஷூ கணியுடன் கண்டு தரிசனம் செய்யலாம். இன்று இரவு அத்தாழப்பூஜைக்கு பிறகு, விஷூ கணி சன்னதியில் தயார் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இதற்காக காய், கனிகள், கணிக்கொன்றை உள்ளிட்ட மலர்கள் வைக்கப்படும்.