×

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியது; தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 6,984 பேர் பாதிப்பு: 18 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள்  எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 (9,47,129) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,47,129  ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 3,289 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,84,199 குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,945 ஆக  உயர்ந்துள்ளது.
* அரசு மருத்துவமனையில் 08; தனியார் மருத்துவமனையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 2,482 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,69,614 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,06,86,440 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 83,332 மாதிரிகள்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 49,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,71,717 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 4,203  ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,75,376 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,781  பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை  யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 262 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 193.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மேற்கு வங்கம்-8.
* மகாராஷ்டிரா-5.
* பீகார்-4.
* ஜார்கண்ட்-4.
* கேரளா-1.
* கர்நாடகா-1.
* ராஜஸ்தான்-1.
* புதுச்சேரி-1.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* துபாய்-1.

Tags : Corona ,Tamil Nadu , The number of patients receiving treatment was close to 50,000; 6,984 people affected by corona in Tamil Nadu in one day: 18 killed ... Health Department report. !!!
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...