சேலம்: தனது 10 வயது மகளை ரூ.10 லட்சத்துக்கு பெற்ற தாயே விற்றதாக செல்போன் உரையாடல் பதிவு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் செல்போன் உரையாடல் பதிவு மூலம் பெண் குழந்தை விற்பனை தெரியவந்துள்ளது. பெண் குழந்தை விற்பனை தொடர்பாக சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் சின்னப்பொண்ணு என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.