தேசிய அளவிலான 68வது சீனியர் கபடி (ஆடவர்) போட்டி இன்று உத்ரபிரதேச மாநிலம் அயோத்தியில் தொடங்குகிறது. இப்போட்டியில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ள அணியில் கலையரசன், சாந்தப்பன் செல்வம், பொன் பார்த்தீபன், பிரவீன், ராம்குமார், சுபாஷ், அப்துல், அபிஷேக், அஜித்குமார், மகாலிங்கம், லிங்கம், சஜின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இறுதிப் போட்டி ஏப்.16ம் தேதி நடைபெறும்.