ஐபிஎல் 2021 டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2021 டி20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய தீபக் ஹுடா 64 ரன்களும், ராகுல் 91 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 217 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 119 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories: