சென்னை: அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தின் மீது ‘செல்பி’ எடுத்த போது தவறி கூவத்தில் விழுந்த ஐடி நிறுவன அதிகாரியை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர். சென்னை கொடுங்கையூர் டி.எச்.சாலை சந்திரா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி(30). பொறியாளரான இவர், பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். வழக்கமாக தினமும் மெரினா கடற்கரையில் மூர்த்தி நடைபயிற்சி செய்வது வழக்கம் அதன்படி இன்று காலை மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்தார். பயிற்சி முடிந்த உடன் காலை 7.15 மணிக்கு அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து தனது செல்போனில் இயற்கை அழகை ரசித்தப்படி ‘செல்பி’ எடுத்தார்.