கோவை: கோவை: கோவையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.ஐ. தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிலர் சிலர் இரவு 10 மணிக்கு மேல் உணவு அருந்த சென்றனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் உணவகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கிருந்த கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் உதவி ஆய்வாளரின் தாக்குதலால் அங்கிருந்த பெண்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளரின் இந்த அடாவடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.