கேந்திரபாரா: ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒட்டிய இரண்டு தலையுடன், மூன்று கைகளுடன் பெண் ஒருவருக்கு விநோத குழந்தை பிறந்துள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரே உடலுடன் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒட்டிப் பிறந்த குழந்தையை பெற்றெடுத்தார். இக்குழந்தையை அப்பகுதியினர் விநோதத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தேபாஷிஷ் சாகு கூறுகையில், ‘ஏழை கர்ப்பணி பெண்ணுக்கு இது இரண்டாவது பிரசவம். தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ள இந்த குழந்தையானது ஒரே உடலுடன் இரு தலைகளுடன் உள்ளது. இரு வாய்களிலிருந்தும் உணவை உட்கொள்கிறது.