சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஞ்சினி பார்த்தசாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்த கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவுடைய பதவிக்காலம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக புதிய துணை வேந்தரை நியமிக்கும் வரை வழிகாட்டுதல் குழுவை நியமிப்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி இருந்தன. ஏற்கனவே புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய சிண்டிகேட் குழு கூடி இந்த வழிகாட்டுதல் குழுவை தேர்வு செய்வதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர்.