கூடலூர்: கூடலூரை அடுத்த தேவாலா அட்டி மற்றும் பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டம் சரகம் 4 பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் விவசாயி ஒருவரின் வீடு ஆகியவற்றை அடுத்தடுத்து சேதப்படுத்தின. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் யானைகள் புகுந்து சேதப்படுத்தியதால் தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.