ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா... 904 பேர் பலி... வரலாறு காணாத உச்சம்: ஒரே மாதத்தில் வைரஸ் பரவல் 6 மடங்கு அதிகரிப்பு!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1. 70 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.35 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,68,912 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக உயர்ந்தது.

* புதிதாக 904 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,01,009 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 89.86% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.26% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.88% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில் 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,33,418 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: