×

சொல்லிட்டாங்க...

* கூச் பெகாரில் நடந்தது இனப் படுகொலை. இந்த உண்மைகளை மறைக்கவே அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அங்கு 72 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டது. - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* பாதுகாப்பு படைகளை முற்றுகையிட மம்தா விடுத்த அழைப்புதான், மோதலுக்கு காரணம். இந்த வன்முறைக்கு நான்தான் காரணம் என அவர் கூறுவது அபத்தம். - உள்துறை அமைச்சர் அமித்ஷா

* உரம் விலையை உயர்த்தி இருப்பதற்கு பதில் ஒரு முழம் கயிறு கொடுத்து, விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ள சொல்லியிருக்கலாம். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை முழுமையாக நிலத்திலிருந்து வெளியேற்றும் வஞ்சக எண்ணத்துடன் உரங்களின் விலை 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

Tags : Told...
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...