லூதியானா: மகாபாரதம் தொடரில் நடித்த மூத்த பஞ்சாபி நடிகர் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த மூத்த பஞ்சாபி நடிகர் சதீஷ் கவுல் (74), கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் மருத்துவமனையில் இறந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர், மகாபாரதம் இதிகாச தொலைக்காட்சி தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து பிரபலமானவர்.